உரி ராணுவத் தலைமையகத் தாக்கு தலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சினம் கொண்டுள்ளனர். அவர்கள் எந்த நேரத் திலும் இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற பதற்றம் பரவி உள்ளது. அதனால் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் முழு விழிப்புநிலையில் வைக்கப் பட்டுள்ளனர். இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியை ஏராளமான கப்பல்களும் விமானங்களும் கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்றுக் காலை குஜராத் மாநில கடற்பகுதியில் வந்து கொண்டு இருந்த பாகிஸ்தான் படகு ஒன்றை கடலோரக் காவற்படையினர் சுற்றிவளைத்தனர். படகில் இருந்த ஒன்பது பேரையும் போர்பந்தர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.