ஜப்பானில் சூறாவளி; விமானச் சேவைகள் ரத்து

தோக்கியோ: ஜப்பானின் தென் பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசுவதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சூறாவளி காரணமாக ஜப்பானின் இரு பெரிய விமான நிறுவனங்களான ஆல் நிப்பன் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை அவற்றின் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று நேற்று காலை ஒகினாவா தீவின் தலைநகரைத் தாக்கத் தொடங்கியதாக ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது.

பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் நேற்று ஒகினாவா தீவில் உள்ள நஹா விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விமான நிலையம் இன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீவில் உள்ள தொடக்கப் பள்ளிக் கூடங்களும் உயர்நிலைப் பள்ளிகளும் மூடப் பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின. சூறாவளிக் காற்று வடகிழக்கு நோக்கி வீசுவதால் ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்‌ஷுவை இப்புயல் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியின்போது கடல் அலைகளின் சீற்றம் அதி கரிக்கலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!