போதைப்பொருள் வைத்திருந்த சிங்கப்பூரர் இந்தோனீசியாவில் கைது

ஜகார்த்தா: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக இந்தோனீசிய விமான நிலைய அதிகாரிகள் சிங்கப்பூரர் ஒரு வரைக் கைது செய்துள்ளனர். இவர் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண் டாவது சிங்கப்பூரர் ஆவார். பாலி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கோ தியாம் ஆன் டெஸ்மண்ட் என்று அடையாளம் காணப் பட்டுள்ள அந்த ஆடவரிடம் 1.47 கிராம் மெதம்ஃபெடமினும் இரண்டு எக்ஸ்டசி மாத்திரை களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள கோ, ஒரு விமானச் சிப்பந்தி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கோ விடுமுறைக்காக பாலி வந்திருந்ததால் அவர் எந்த விமானச் சேவையைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப் படவில்லை. அவரது பணப்பையில் கண்டெடுக்கப்பட்ட போதைப் பொருளை கோ சிங்கப்பூரில் வாங்கியதாக அதிகாரிகள் கூறி னர். வாங்கிய போதைப்பொருளில் சிலவற்றை அவர் சிங்கப்பூரில் உட்கொண்டதாகவும் அறியப்படு கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோவுக்கு ஐந்திலிருந்து பதினைந்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!