கோலாலம்பூர்: சிப்பாங்கில் நடந்த எஃப்-1 கார் பந்தயத்தின் போது மலேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் உள்ளாடையை அணிந்திருந்த 9 ஆஸ்திரேலியர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். பின்னர் நீதிமன்றம் இவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தபின் விடுதலை செய்தது. தங்களின் செயலுக்காக நீதிமன்றத்தில் இந்த 9 பேரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இவர்கள் மீது நேற்று காலை குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 290ஆவது பிரிவின் கீழ் அந்த 9 ஆஸ்திரேலியர்கள் மீதும் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் குற்றவியல் சட்டத்தின் 173-ஏ பிரிவைப் பயன்படுத்தி இவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்காமல், எச்சரிக்கை செய்து விடுவிப்பது என நீதிமன்றம் முடிவு செய்ததாக நீதிமன்றத் தகவல் தெரிவித்தது.
மலேசியாவில் கைதான 9 ஆஸ்திரேலியர்கள் விடுதலை
7 Oct 2016 08:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!