டமாஸ்கஸ்: சிரியாவில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோடுவதாக தகவல்கள் கூறுகின்றன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட் ஏராளமானோர் ஐஎஸ் கட்டு பாட்டில் உள்ள பகுதிகளி லிருந்து வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளை நாடிச் செல்வதாகக் கூறப்பட்டது. ஐஎஸ் போராளிகளிட மிருந்து தப்பிக்க சிரியாவுக்குள் நுழைந்த குடும்பங்களும் அதில் அடங்கும். சிரியாவில் கிளர்ச்சித் தரப் பினர் வசம் உள்ள பகுதிகளை நாடி வரும் மக்கள் ஐஎஸ் அனு தாபிகளா என்பதை சோதிக்க அவர்களின் கைத்தொலைபேசி களை கிளர்ச்சியாளர்கள் சோதனை செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சிரியா அமைதி உடன்பாடு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அங்கு சண்டை தீவிரம் அடைந்துள்ளது. அலெப்போ நகரை திரும்பக் கைப்பற்ற சிரியா அரசாங்கப் படை அந்நகரை சுற்றிவளைத்துள்ள நிலையில் 250,000 பேர் அந்நகரில் சிக்கியுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் அந்நகரில் 400 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்று கூறப்பட்டது.
ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள பகுதிகளிலிருந்து தப்பி வரும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்