புயல் தாக்கி பலர் மரணம்; ஃபுளோரிடாவில் அவசரநிலை

ஆர்லண்டோ: கரீபியன் கடலில் உருவான 'மெத்யூ' என்று அழைக்கப்படும் புயல் தற்போது ஃபுளோரிடாவை நெருங்கியுள்ள வேளையில் முன்னதாக அப்புயல் ஹெய்ட்டியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலில் சிக்கி ஹெய்ட்டியில் குறைந்தது 339 பேர் இறந்த தாகவும் சுமார் 500 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்து விழுந்ததிலும் மரங்கள் முறிந்து விழுந்ததிலும் காயமுற்ற வர்கள் ஆவர். பாதுகாப்பு கருதி இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஃபுளோரிடாவில் இப்புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் சுமார் 1.5 மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மீட்பு மற்றும் அவசர கால குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனவே, அதிபர் ஒபாமா ஃபுளோரிடாவில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

புயலின் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஃபுளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1.5 மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளனர். புயல் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!