ஜெருசலம் பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் காயம்

ஜெருசலேம்: இலகு ரயில் நிலையம் ஒன்றின் அருகில் காத்திருந்தோர் மீது காரிலிருந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் அறுவர் காயமுற்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவ்விருவரில் போலிஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம். போலிசார் நடத்திய பதில் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அந்த துப்பாக்கிக்காரன் கொல்லப்பட்டான். ஜெருசலம் போலிஸ் தலைமை யகத்துக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த பயங்கரவாதி, போலிசாரைக் கண்டதும் அவர் களை நோக்கி சுடத் தொடங்கி யதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. தாக்குதல் நடத்தி, பின் மாண்டுபோன அந்த ஆடவர் 39 வயதான பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கத்தி, துப்பாக்கி, காரேற்றிக் கொல்லுதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்தப் பகுதியில் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவை நெருங்கும் வேளையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!