வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்த லில் போட்டியிடவிருக்கும் அதிபர் வேட்பாளர்களான ஹில்லரி கிளின்டனும் டோனல்ட் டிரம்பும் இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவரையொருவர் கடுமையாகக் குறை கூறினர். ஞாயிற்றுக்கிழமை இரவு மிசோரி, செயின்ட் லூயிசிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த நேரடி விவாதத்தில் ஹில்லரியையும் அவரது கணவர் கிளின்டனையும் டிரம்ப் கடுமை யாகச் சாடினார். "தேர்தலில் வெற்றி பெற்று நான் அதிபரானால் ஹில்லரி வெளியுறவு அமைச்சராக இருந்த போது 33,000 தனிப்பட்ட மின்னஞ்சல்களை அழித்தது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்," என்று டிரம்ப் கூறினார்.
"அதுகுறித்து விசாரிக்க சிறப்பு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரை நியமிப்பேன். ஹில்லரியின் தனிப்பட்ட மின்னஞ்சல் விவகாரம் தொடர் பில் அவர் சிறைக்குச் செல்ல நேரிடலாம்," என்றும் டிரம்ப் கூறினார். இதற்குப் பதிலடி கொடுத்த ஹில்லரி, டிரம்ப் கூறிய அனைத்தும் முற்றிலும் பொய் என்று கூறினார். அவரது குற்றச்சாட்டு குறித்து தான் வியப்படையவில்லை என்று கூறிய ஹில்லரி, இவ்வளவு சினம் கொண்ட ஒருவரை இந்த நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பவராக வெள்ளை மாளிகைக்கு வாக் காளர்கள் அனுப்பாமல் இருப்பது நல்லது என்று சொன்னார். ஹில்லரியை மீண்டும் சாடிய டிரம்ப், தனது ஆதரவாளர்களைப் பற்றி அவர் குறை கூறியதற்காக அவரது மனதில் அதிக வெறுப் பைக் கொண்டிருப்பதாகச் சாடி னார்.
தொலைக்காட்சி நேரடி விவாதத்தின்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஹில்லரி பதில் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கிறார் டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்