கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட முதல் நாள் அதிரடி சோதனையில் நீர்வளத் துறையைச் சேர்ந்த இரு உயர் அதிகாரிகளிடமிருந்து 114 மில்லியன் ரிங்கிட் (37.9 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள ரொக்கமும் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் ஆறு நாட் களுக்குப் பிறகு இதே விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு வங்கி களில் மேலும் 30 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் 30 மில்லியன் மதிப்புள்ள சொத்துப் பத்திரங் களும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். சாபாவில் தண்ணீர்த் திட்டங் களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சாபா நீர் வளத் துறை இயக்குநர் அக் தாஹிர் அக் தாலிப், 54, துணை இயக்குநர் டியோ சீ கோங், 52 ஆகியோரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இட்டுச் செல் லும் ரொக்கமும் சொத்துப் பத்திரங்களும் பதுக்கி வைக்கப் பட்ட விவரங்கள் தெரிய வந்தன.
இம்மாதம் 4ஆம் தேதி இரு அதிகாரிகளும் கைது செய்யப் பட்டனர். இருவரும் 200 மில்லியன் ரிங்கிட் வரை மோசடியில் ஈடு பட்டிருக்கலாம் என்று நம்பப்படு கிறது.
அதிகாரப் துஷ்பிரயோகம், கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சாபாவில் நீர் வளத்தைப் பெருக்குவதற்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்தது தொடர்பில் அவர்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தின் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பல மில்லியன் ரொக்கம், நகைகள், சொத்துப் பத்திரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வைத்துள்ளனர். படம்: த ஸ்டார்