டமாஸ்கஸ்: சிரியாவில் அலெப்போ நகரில் ரஷ்ய விமானங்கள் மீண்டும் குண்டு களை வீசி கடுமையாகத் தாக்கி வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அந்நகரில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் என்றும் இல்லாத அளவுக்கு அதிக குண்டுகளை வீசித் தாக்கி வருவதாக கிளர்ச்சித் தரப்பினர் கூறியுள் ளனர். அத்தாக்குதலில் குழந்தைகள் உள்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக சிரியா அரசாங்கம் தற்காலிகமாக சில மணி நேரம் தாக்குதலை நிறுத்தி வைத்த பிறகு மீண்டும் தாக்குதல் தொடங்கிய வேளை யில் ரஷ்ய விமானங்களும் அரசாங்கப் படையினருக்கு ஆதரவாக தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளன. சிரியாவில் நீடிக்கும் உள் நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் முயற்சியில் காணப் பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு சென்ற மாதம் தோல்வி அடைந் தது. அதனைத் தொடர்ந்து சிரியாவில் அலெப்போ நகரில் சண்டை தீவிரம் அடைந்துள்ளது.
ரஷ்ய விமானங்கள் மீண்டும் அலெப்போவில் குண்டுவீச்சு
13 Oct 2016 06:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!