ரஷ்ய விமானங்கள் மீண்டும் அலெப்போவில் குண்டுவீச்சு

டமாஸ்கஸ்: சிரியாவில் அலெப்போ நகரில் ரஷ்ய விமானங்கள் மீண்டும் குண்டு களை வீசி கடுமையாகத் தாக்கி வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அந்நகரில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் என்றும் இல்லாத அளவுக்கு அதிக குண்டுகளை வீசித் தாக்கி வருவதாக கிளர்ச்சித் தரப்பினர் கூறியுள் ளனர். அத்தாக்குதலில் குழந்தைகள் உள்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக சிரியா அரசாங்கம் தற்காலிகமாக சில மணி நேரம் தாக்குதலை நிறுத்தி வைத்த பிறகு மீண்டும் தாக்குதல் தொடங்கிய வேளை யில் ரஷ்ய விமானங்களும் அரசாங்கப் படையினருக்கு ஆதரவாக தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளன. சிரியாவில் நீடிக்கும் உள் நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் முயற்சியில் காணப் பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு சென்ற மாதம் தோல்வி அடைந் தது. அதனைத் தொடர்ந்து சிரியாவில் அலெப்போ நகரில் சண்டை தீவிரம் அடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!