பேங்காக்: தாய்லாந்தின் பட்டத்து இளவரசர் மஹா வஜிரலொங்கோன் அவரது தந்தையான அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் மறைந்த துக்கத்தில் இருக்கும் இவ்வேளையில் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் தொடர்பிலான முடிவைப் பின்னர் எடுக்கலாம் என்று கூறியிருப்பதற்காக மக்கள் வருத்தப்பட வேண்டாம் என தாய்லாந்தின் ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார். ராணுவ ஆட்சி, அரசியல் சூழ்ச்சிகள், தெருப் போராட்டங்கள் போன்றவற்றை அண்மைக் காலத்தில் சந்தித்த தாய்லாந்து மக்களிடையே இந்த நடவடிக்கை நிச்சயமற்ற தன்மையை உருவாக் கியுள்ளது. சென்ற வியாழக்கிழமை தமது 88வது வயதில் உயிர்நீத்த மன்னர் அதுல்யதேஜ் நாட்டின் நிலைத்தன்மை, தார்மீக ஆதரவு ஆகியவற்றின் சின்னமாக தாய்லாந்து மக்களுக்கு விளங் கினார். அவரது மறைவால் தாய்லாந்து மக்கள் பெரிதும் சோகமுற்றிருக்கின்றனர். தாய்லாந்தில் பெரும்பாலானோர் கறுப்பு நிற உடையணிந்து துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மக்களோடு இளவரசர்
வஜிரலொங்கோனும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதால், மன்னரால் அடுத்த மன்னர் என்று அடையாளம் காணப்பட்ட அவர், முறையாக அப்பதவியை ஏற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக 96 வயதான முன்னாள் தளபதி பிரேம் டின்சுலானோன்டா அரசுப் பொறுப் பேற்க நியமிக்கப்பட்டுள்ளார். தம்மையும் தளபதி பிரேமையும் அரசாங்கத்தை ஏற்று நடத்துமாறு பட்டத்து இளவரசர் வஜிரலொங்கோன் நியமித்திருப்பதாக நேற்று முன்தினம் ராணுவ ஆட்சி மன்றத் தலைவரும் நாட்டின் பிரதமருமான சான் ஓ சா தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார். மேலும் நாட்டு நிர்வாகம், வாரிசு பதவியேற்பு போன்றவை குறித்து வருத்தமோ, குழப்பமோ அடைய வேண்டாம் எனவும் தமது அறிக்கையில் அவர் சொன்னார்.