மோசுல் நகரில் தொடர்ந்து போராளிகளுடன் ச ண்டை

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் நேற்று இரண் டாவது நாளாக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ஈராக்கியப் படை மோசுல் நகருக்குள் முன்னேறிச் சென்ற போதிலும் போராளிகளிடமிருந்து அந்நகரை ஈராக்கியப் படையினர் கைப்பற்று வதற்குச் சில காலம் பிடிக்கலாம் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் பீட்டர் குக் கூறினார்.

ஈராக் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டு வரும் ஐஎஸ் போராளிகள் எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களிடமிருந்து மோசுல் நகரை மீட்க முடியும் என்று திரு பீட்டர் குக் சொன்னார். ஐஎஸ் போராளிகள் தற்போது ஈராக் ராணுவத்தை எதிர்த்து கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். மோசுல் நகருக்குள் நுழையும் ஈராக்கிய ராணுவ வாகனங்களை ஐஎஸ் போராளிகள் தாக்கி வருகின்றனர்.

இதனால் மோசுல் நகருக்கு வெகு அருகில் கடும் சண்டை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கின் 2வது பெரிய நகரான மோசுல் நகரை ஐஎஸ் போராளிகள் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அப்போது முதல் போராளிகள் அந்நகரை தங்கள் கோட்டையாகக் கருதி வருகின்றனர்.

ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஈராக்கியப் படையினர் மோசுலுக்கு அருகே காணப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!