ஜகார்த்தா: கத்திகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த ஒருவரை இந்தோனீசியப் போலி சார் சுட்டுக் கொன்றதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். குழாய் வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் வைத் திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட அந்த நபர், ஜகார்த்தா அருகே போலிஸ் அதிகாரிகள் மூவரை கத்தியால் தாக்கியபோது போலிசார் அவரை சுட்டுக் கொன்றதாக ஜகார்த்தா போலிஸ் பேச்சாளர் அவி சிடியோனோ கூறினார்.
அந்த நபர், போலிசார் மீது இரண்டு குழாய் வெடிகுண்டு களை வீசியதாக அப்பேச்சாளர் சொன்னார். சுட்டுக்கொல்லப் பட்ட அந்த நபர் ஐஎஸ் ஆதர வாளர் என்று நம்பப்படுகிறது.
போலிசார் தாக்கப்பட்ட இடத்தில் வெடிகுண்டு நிபுணர் ஒருவர் சோதனை செய்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்