மோசுலுக்கு அருகே உள்ள பர்ட்டாலா நகரம் ஈராக் வசம்

அர்பில்: கிழக்கு ஈராக்கில் மோசுல் நகருக்கு அருகேயுள்ள கிறிஸ்துவ நகரான பர்ட்டாலாவை ஈராக்கின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து வியாழக்கிழமை கைப்பற்றியதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது. இந்த நகரத்தை சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்பொழுது அதில் வசித்து வந்த ஏறக்குறைய 10,000 பேர் அந்நகரிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

"பர்ட்டாலா நகரை எங்கள் முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளோம் என்பதை பர்ட்டாலா, மோசுல் நகர மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு வசிப்பவர்கள், நகரத்தின் தேவாலயங்கள், அங்குள்ள கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருப்பதை நான் அறிவிக்கிறேன்," என்று அந்தப் படைத் தளபதியான தாலேப் ஷெகாத்தி அல் கெனானி தெரிவித்தார்.

பர்ட்டாலா நகரைக் கைப்பற்றியது ஈராக்கிய அரசுக்கு அண்மைய காலத்தில் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது. "மோசுல் நகரை நாங்கள் திரும்பப் பெறப்போவதை அந்நகர மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று திரு கெனானி விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!