ஜப்பான் பூங்காவில் குண்டு வெடிப்பு; ஒருவர் மரணம், மூவர் காயம்

தோக்கியோ: ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் ஒரே சமயத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மூவர் காயம் அடைந்தனர் என்றும் உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது. தோக்கியோவிலிருந்து தெற்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள உட்சுனோமியாவில் உள்ள பூங்காவில் இரண்டு இடங் களில் ஒரே சமயத்தில் உள்ளூர் நேரப்படி 11.30 மணி அளவில் குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. "ஒருவர் இறந்து கிடந்தார்," என்று சம்பவம் பற்றிப் பேசிய தீ அணைப்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். மேல் விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. பூங்காவில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்த நபரின் உடல் அடையாளம் தெரி யாத அளவுக்குச் சிதைந்திருந்தது. காயம் அடைந்த மூவரின் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்று கூறிய பேச் சாளர், கார் நிறுத்துமிடத்தில் மற் றொரு குண்டு வெடித்தது என்று குறிப்பிட்டார். இதற்கிடையே ஜப் பானிய தொலைக்காட்சிகள் வெளியிட்ட படங்களில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு கார் முற்றிலும் கருகிக் கிடந்ததைக் காண முடிந்தது.

ஜப்பான் பூங்காவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!