மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்ட தாய்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு தாய் அவரது எட்டு வயது மகளை சங்கிலியால் கட்டிப் போட்ட விவகாரம் சமூக வலைத் தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து மலேசியர்கள் பலர் தங்கள் சினத்தை வெளிப் படுத்தியுள்ளனர். ஒரு தாய் தன் மகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதை பலர் கடுமையாகச் சாடியுள்ளனர். தன் மகள் பள்ளிக்கூடம் செல்ல மறுத்த தால் அதற்குத் தண்டனையாக மகளை இரும்புச் சங்கிலி கொண்டு ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டிப்போட்டதாக 30 வயதான மாது கூறியுள்ளார்.

பள்ளிச் சீருடை அணிந்திருந்த ஒரு சிறுமி விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள செய்தி கிடைத்ததும் போலிசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்ததாக சுபாங் ஜெயா போலிஸ் அதிகாரி முகம்மது அஸ்லின் சடாரி கூறினார். அந்த மாது தன் மகளைச் சங்கிலியால் கட்டிப் போட்டதை ஒப்புக்கொண்டதாக அஸ்லின் கூறினார். சிறுமியை விடுவித்த போலிசார் சிறுமியையும் அவரின் தாயாரை யும் விசாரணைக்காக அழைத் துச் சென்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!