குவாந்தான்: மலேசியாவின் குவாந்தான் நகரில் நடைபெற்று வரும் நான்காவது ஆசிய ஹாக்கி கிண்ணப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும் தென்கொரியாவும் இன்று மோது கின்றன. இதுவரை நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா பட்டிய லின் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
தென்கொரியாவுக்கும் போட்டி யை ஏற்று நடத்தும் மலேசியா வுக்கும் இடையிலான மற்றோர் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந் தது. லீக் சுற்று முடிவில் இந்தியா வுக்கு அடுத்தப்படியாக, மலேசியா இரண்டாவது இடத்திலும் பாகிஸ் தான் மூன்றாவது இடத்திலும் தென்கொரியா நான்காவது இடத் திலும் வந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.