துருக்கியில் அரசாங்க அதிகாரிகள் 10,000 பேர் நீக்கம்

அங்காரா: துருக்கியில் அரசாங்க அதிகாரிகள் 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட புரட்சி தொடர்பில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்விமான்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், போலிஸ் அதிகாரிகள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம், நீதிமன்றம், சமய விவகாரப் பிரிவு, நீதித் துறை, வெளியுறவு அமைச்சு, தேசிய கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, துருக்கிய ஆயுதப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர். புதிய அவசரகால ஆட்சி உத்தரவின் கீழ் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற மதகுரு ஃபெதுலா குலனுடன் தொடர்பு வைத்திருக் கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட பலரை பணிநீக்கம் செய்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். புதிய உத்தரவின் கீழ் பல ஊடக நிறு வனங்களும் செய்தித்தாட்களும் சஞ்சிகைகளும் மூடப்பட்டன. பிகேகே எனும் பயங்கரவாத அமைப்புக்காக பிரசாரத்தை அந்த நிறுவனங்கள் பரப்பி வந்ததாக நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!