வெல்லிங்டன்: நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிறைஸ்ட்சர்ச் நகரை இரு நிலநடுக்கங்கள் உலுக்கியுள்ளன. அந்நகரின் வடகிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து நேற்று காலை அப்பகுதியை 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக் கியதாகவும் புவியியல் ஆய் வாளர்கள் தெரிவித்தனர்.
முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது குறைந்தது இருவர் உயிரிழந்ததாகக் கூறப் பட்டது. அத்துடன் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் அவை சேதம் அடைந்தன. நில நடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல சாலைகள் பழுதடைந்தன. பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியுற நேர்ந்ததாக அதி காரிகள் கூறினர். கிறைஸ்ட்சர்ச் நகரிலிருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் நியூசிலாந்தின் தெற்குத் தீவுக்கு அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெடிப்பைப் பார்த்து பிரமித்து நிற்கும் குடியிருப்பாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்