ஜகார்த்தா: ஜகார்த்தா ஆளுநர் பசுகி ஜஹஜா புர்னாமா மீது கூறப்படும் சமயநிந்தனை புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசார ணையில் திரு புர்னாமாவை சந்தேக நபராக அந்நாட்டுப் போலிசார் குறிப்பிட்டுள்ளனர். அஹோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் புர்ணாமா மீது கூறப்படும் புகார் தொடர்பில் போலிசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த சீனரான புர்னாமா இஸ்லாமிய புனித நூலான குரானை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி சில முஸ்லிம் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் புர்னாமா, தேர்தல் பிரசாரத்தின்போது தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார். படம்: ராய்ட்டர்ஸ்