முன்னாள் விடுதலைப்புலி தளபதி கருணா கைது

இலங்கையின் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்து பின்னர் அதிலிருந்து பிரிந்து ராஜபக்சே அமைச்சரவையில் அங்கம் வகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் (படம்) நேற்றுக் காலை கைது செய்யப்பட்டார். அரசாங்கத்துக்குச் சொந்த மான குண்டு துளைக்காத ஆடம் பர வாகனம் ஒன்றை தமது தேவைக்கு தவறாகப் பயன்படுத் திய குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

கொழும்பு தலைமை நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட்ட அவரை டிசம்பர் 7ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிழக்கு மாகாணத்தில் கருணா வசித்து வரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிநவீன வாகனம் ஒன்றை அண்மையில் இலங்கை போலிசார் கண்டுபிடித்தனர். சுமார் 800 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள அந்த வாகனம் தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சராக பதவி வகித்த வேளையில் கருணாவுக்கு வழங் கப்பட்டது. முன்னைய அதிபர் ராஜபக்சே அதனை அவருக்கு வழங்கி இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!