மெடலின்: பிரேசில் நாட்டு காற்பந்துக் குழுவினர் உள்பட மொத்தம் 81 பேரை ஏற்றிச்சென்ற ஒரு விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் பிரேசில் காற்பந்து விளையாட்டாளர்கள் உள்பட 72 பயணிகளும் சிப்பந்தி கள் 9 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பொலிவியாவிலிருந்து கொலம் பியா வந்துகொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று கொலம்பியாவின் மெடலின் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது மலைப் பகுதி யில் விழுந்து நொறுங்கியதாக கொலம்பியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் இதுவரை 5 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் காற்பந்துக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் அலன் ருஷல், கோல் காப்பாளர்கள் ஜாக்சன் ஃபோல்மென், டெனிலோ, பிரேசில் பத்திரிகையாளர் ஒருவர் ஆகியோர் விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் அடங்குவர்.
விமான விபத்தில் உயிர் தப்பிய பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர் அலன் ருஷல் அவசரமாக கொலம்பிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். படம்: இபிஏ