எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவிப்பு

மலேசியாவில் விரைவில், எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்து இருக்கிறார். பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தம்மைப் பதவி விலக வலியுறுத்தும் குரல் களுக்குச் செவிசாய்க்கப்போவது இல்லை என்றும் இறக்கும் வரை போராடுவேன் என்றும் திரு நஜிப் முழங்கியிருக்கிறார். திரு நஜிப் தலைமையிலான தேசிய கூட்டணி ஆட்சி 2018 ஜூன் மாதம் வரை தொடரலாம் என்ற நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று அவர் கோடிகாட்டினார். ஆளுங்கட்சியான அம்னோ வின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. அக்கட்சியின் சுமார் 2,600 பேராளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர், கட்சியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!