பெட்டாலிங் ஜெயா: பினாங்கில் உள்ள விரைவுச்சாலையில் முதலாளியை சுட்டுக்கொன்ற தாகக் கூறப்படும் பாதுகாவலர் ஒரு மனநோயாளி என்பது தொடக்க புலன்விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். அந்த துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஓங் டெய்க் வாங்கும் மேலும் இருவரும் கொல்லப் பட்டனர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் மூவர் காயம் அடைந்தனர்.
திரு ஓங் தனது காரில் விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தததாக போலிசார் கூறினர். அவருக்கும் அவரது பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை அந்த பாதுகாவலர் சுட்டுக் கொன்ற தாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் போலிசார் ஒரு துப்பாக்கியைக் கண்டெடுத்தனர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்த பாதுகாவலரையும் மேலும் ஒருவரையும் கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.