பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தும் தலைவர்கள்

தோக்கியோ: ஜப்பான் வந்துள்ள ரஷ்ய அதிபர் புட்டினுடன் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தத் தொடங்கியுள்ளார். நகோட்டாவில் உள்ள உல்லாசத் தலத்தில் அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இரு தலைவர்களும் இரு நாட்டு பாதுகாப்பு குறித்தும் எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்துவர் என்று தெரிகிறது. எல்லைத் தகராறு காரணமாக ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடிக்கும் வேளையில் இந்த சந்திப்பு இடம் பெறுகிறது. பாதுகாப்பு குறித்து பேச்சுநடத்த ஜப்பானியப் பிரதமர் அபே விருப்பம் தெரிவித்திருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறினார். இதனால் இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த பாதுகாப்புப் பேச்சு மீண்டும் தொடங்கவிருப்பதாக அவர் சொன்னார்.

ஜப்பான் வந்துள்ள ரஷ்ய அதிபர் புட்டினை வரவேற்கும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!