நஜிப்: சரவாக்கில் மூன்று பாலங்கள் கட்டப்படும்

கோலாலம்பூர்: சரவாக்கில் மொத்தம் 1.4 பில்லியன் ரிங்கிட் செலவில் மூன்று பெரிய பாலங்கள் கட்டப்படும் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். அந்தப் பாலங்கள் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதற்கான கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் அவர் சொன்னார். பாடாங் சடோங் பால திறப்பு விழாவின்போது திரு நஜிப் புதிய பாலங்கள் கட்டும் திட்டம் பற்றி அறிவித்தார். மொத்தம் 231 மில்மியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் சரவாக்கில் இரு முக்கிய சாலை கட்டமைப்புப் பணிகள் முடிவுறும் என்றும் திரு நஜிப் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!