இஸ்தான்புல்: துருக்கியில் ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லோவ் சுட்டுக்கொல்லப்பட்டதில் தற்போது நாடு கடந்து வாழும் மதகுரு ஃபெதுல்லா குலனுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று கூறப்படுவது குறித்து துருக்கிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்கு காரணமானவர் என்று கூறப்படும் ஃபெதுல்லா குலன் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று ரஷ்யா கூறியுள்ளது. அங்காராவில் ரஷ்யத் தூதர் கார்லோவ் பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.