சந்தேகப் பேர்வழிகள் நால்வர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர்: பிலீப்பீன்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ் குழுவில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்திருப்பதாக மலேசிய போலிசார் கூறினர். அவர்களில் 31 வயது பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவர், பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், 27 வயது மலேசிய மாது ஒருவர் ஆவர். அந்த நால்வரும் இம்மாதம் 13ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் சாபாவிலும் கோலாலம்பூரிலும் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். மத்திய கிழக்கிலிருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கிச்செல்லும் இடமாக சாபாவை மாற்ற திட்டமிட்டிருந்த புதிய ஐஎஸ் குழுவில் அந்த நால்வர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!