துருக்கியில் அரசாங்க ஊழியர்கள் 90,000 பேர் பணிநீக்கம்

அங்காரா: துருக்கியில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் இதுவரை அரசாங்க ஊழியர்கள் சுமார் 90,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவரத்தை அந்நாட்டு தொழிலாளர் அமைச்சர் மெஹ்மட் மியுஸினோகுலு செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்கள் 125,485 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சொன்னார். புரட்சிக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் முஸ்லிம் சமய போதகர் ஃபெதுல்லா குலனின் ஆதரவாளர்களைத் துடைத்தொழிப்பதில் துருக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோன்ற புரட்சி மீண்டும் ஏற்படாமல் இருக்க துருக்கிய அதிபர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!