வாஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான தமது முதல் தொலைபேசி உரையாடலின்போது ஒரே சீனா கொள்கையை மதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இருநாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் பேசியதாக தெரி விக்கப்பட்டது. அண்மையில் தைவான் நாட்டுத் தலைவருடன் டிரம்ப் பேசியதாலும் ஒரே சீனா கொள் கையை அமெரிக்கா ஏற்கத் தேவையில்லை என்று டிரம்ப் கூறியிருந்ததாலும் சீனா அதிருப்திக் குரல் எழுப்பி இருந்தது. தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளை ஒரே சீனா கொள்கையின்கீழ் தமது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வருகிறது.
"சீன அதிபர் ஸி ஜின்பிங் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஒரே சீனா கொள்கையை மதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார்," என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிடப்பட்டிருந்தது.