சோல்: ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதன் மூலம் எங்களுடைய ஆயுதங்களை நவீனமயமாக்கு வதில் இன்னும் ஒரு படி முன் னேறியிருக்கிறோம் என்று வட கொரியா கொக்கரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை யும் மீறி ஞாயிற்றுக்கிழமை அன்று வடகொரியா நெடுந்தொலைவு ஏவுகணையைச் சோதித்துள்ளது. அந்த ஏவுகணை ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்தது. இது, அமெரிக்கா அதிபராக திரு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா நடத்தியிருக்கும் முதல் ஏவுகணை சோதனையாகும். ஃபுளோரிடாவில் அதிபர் டிரம்ப் பும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயும் பாதுகாப்புக் குறித்து விவாதித்தபோது வடகொரியா புதிய வகை ஏவுகணையைப் பாய்ச்சி மிரட்டியிருக்கிறது.
ஏவுகணை சோதிக்கப்பட்ட இடத்தில் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இருப்பதைக் காட்டும் படம். படம்: ராய்ட்டர்ஸ்