ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநர் தேர்தலில் தற்போது அப்பதவியை வகிக்கும் ஆஹோக் என்றழைக்கப்படும் பசுகி ஜஹஜா புர்னாமாவுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் அனிஸ் பஸ்வெடானுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 7.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கையின் போக்கு அடிப்படையில் பஸ்வேடான் 40.54% வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆஹோக் 39.43% வாக்குகளும் மற்றொரு வேட்பாளரான அகுஸ் யுதயோனோ 20.03 % வாக்குகளும் பெற்றிருந்தனர். யாருக்கும் 50%க்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிடில் முதல் இரண்டு நிலைகளில் வரும் வேட்பாளர்களிடையே போட்டி நடத்தப்படும்.
ஜகார்த்தா ஆளுநர் தேர்தலுக்குத் தமது மனைவி, மகனுடன் வாக்களிக்க வரும் பசுகி ஜஹஜா புர்னாமாவுடன் (நடுவில்) ஆசையாசையாய் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் ஆதரவாளர். படம்: ஏஎஃப்பி