கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் மலேசியப் போலிசார் மூன் றாவது சந்தேக நபரையும் தடுத்து வைத்துள்ளனர். இந்தக் கொலையின் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபராக இந்தோனீசிய கடவுச்சீட்டைக் கொண்டிருந்த 25 வயதுப் பெண்ணை மலேசிய போலிசார் நேற்று பிடித்தனர்.
அந்தக் கடவுச்சீட்டில் அவரது பெயர் சிட்டி ஆயிஷா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான படங்களிலிருந்து அடையாளம் காணப்பட்ட அவர், கைது செய்யப்பட்டபோது தனியாக இருந்தார் என காவல் துறை உயர் அதிகாரி காலிட் அபு பக்கர் கூறினார்.