கோலாலம்பூர்: கிம் ஜோங் நாம் கொலை வழக்கில் தேடப்படும் நான்கு வடகொரிய சந்தேக நபர் களைக் கண்டுபிடிக்க அனைத் துலக காவல்துறையின் உதவியை மலேசியா நாடியிருக்கிறது. உலக முழுவதும் நான்கு சந் தேக நபர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் மலே சியா கேட்டுக்கொண்டது. வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம் கடந்த வாரம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப் பட்டார். கிம் ஜோங் நாமை அடையாளம் காட்டுவதற்காக அவ ரது உறவினர் ஒருவர் மலேசியா வருவதாக நேற்று மலேசிய காவல் துறைத்தெரிவித்தது.
மலேசிய காவல் துறைத்தலைவர் காலித் அபு பக்கர். படம்: த ஸ்டார்