மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த கள்ளக்குடியேறிகள்

வா‌ஷிங்டன்: இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி கூறினார். திரு டோனல்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளில் பெரும்பாலானோரை வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லையில் சுவர் எழுப்பவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். சுவர் எழுப்புவதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட மெக்சிகோ பணம் கொடுக்க வேண்டும் என்ற அவரது யோசனையை மெக்சிகோ நிராகரித்துவிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!