ஜப்பான் விலங்கியல் தோட்டத்தில் பயிற்றுவிப்பாளரைக் கொன்ற யானை

தோக்கியோ: ஜப்பானின் வாகயாமா பகுதியில் அமைக்கப்படும் 'அட்வென்சர் வோர்ல்ட்' எனும் விலங்கியல் தோட்டத்தில் இந்திய ரக யானை ஒன்றை தாய்லாந்தைச் சேர்ந்த விசய் மடீ தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். ஏதோ காரணத்தால் கோபமடைந்த அந்த யானை தும்பிக்கையைச் சுழற்றியது. யானையின் தும்பிக்கையில் சிக்கிய விசய்யைத் தூக்கி தரையிலும் கூண்டின் மீதும் அடித்ததில் அவர் பலத்த காயமுற்றார். தகவலறிந்த போலிசார் 37 வயது விசய்யை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் பின்னர் உயிரிழந்தார். பொதுமக்களுக்காகத் திறந்து விடப்படுவதற்கு முன்பே இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!