பாக்தாத்: ஈராக்கில் மோசுல் நகரின் பழைய நகருக்குள் நுழைந்திருக்கும் ஈராக்கியப் படை அங்குள்ள அல்-நூரி பள்ளிவாசலைக் கைப்பற்ற கடும் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கிய ராணுவ ஹெலிகாப்டர்கள் மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளின் இலக்கு கள் மீது குண்டுகளை வீசித் தாக்கி வரும் வேளையில் ஈராக்கிய தரைப் படையினர் போராளிகளை எதிர்த்து கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர்.
மோசுல் நகரில் நீடிக்கும் சண்டைக்குப் பயந்து வெளியேறிய ஈராக்கிய மக்கள் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்தனர். இங்கிருந்து அவர்கள் ஒரு முகாமிற்கு மாற்றப்படுவர். படம்: ராய்ட்டர்ஸ்