மக்களிடம் மன்னிப்பு கேட்டார் தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க்

சோல்: ஊழல் விவகாரம் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் விசாரணையை எதிர்நோக்கும் தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியன் ஹை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். விசாரணைக்காக அவர் நேற்று அரசாங்கத்தரப்பு வழக் கறிஞர் அலுவலகத்திற்கு வந் திருந்தார். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய அவர், தான் மிகவும் வருந்துவதாகக் கூறி னார். அத்துடன் விசாரணையில் ஒத்துழைக்கவிருப்பதாகவும் அவர் சொன்னார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப் பட்ட திருவாட்டி பார்க், நேற்று அரசாங்க தலைமை வழக் கறிஞர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித் தார்.

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் (நடுவில்) விசாரணைக்காக அரசாங்க தலைமை வழங்கறிஞர் அலுவலகத்திற்கு வருகிறார். ஊழல் விவகாரம், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!