அபு சாயஃப்பிடமிருந்து காப்பாற்றப்பட்ட மலேசியர்கள்

மணிலா: அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பால் ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட இரு மலேசியர்களை பிலிப்பீன்ஸ் ராணுவப் படை பத்திரமாக மீட்டுள்ளது. 45 வயது திரு தயுதீன் அன்ஜுட், 62 வயது திரு அப்துரஹிம் பின் சுமாஸ் ஆகிய இருவரையும் சாபாவின் லஹாட் டத்துவுக்கு அருகில் இருக்கும் கடற்பகுதி யிலிருந்து அபு சாயஃப் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதியன்று கடத்தினர். அவர்களை விடுவிக்க 100 மில்லியன் பெசோ (2.8 மில்லியன் வெள்ளி) பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை பிலிப்பீன்ஸின் சூலு மாநிலத்தில் கிட்டத்தட்ட 30 அபு சாயஃப் பயங்கர வாதிகளுக்கு எதிராகத் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்குள்ள சதுப்பு நிலங்களில் அந்த இரண்டு மலேசியப் பிணைக் கைதிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.

காப்பாற்றப்பட்ட மலேசியர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!