ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இந்தோனீசியாவில் ஐவர் கைது

ஜகார்த்தா: தீவிரவாத இஸ்லாமிய குழு ஒன்றின் தலைவர் முகம்மது காத்தாத் உள்பட ஐந்து பேரை இந்தோனீசியப் போலிசார் கைது செய்துள்ளனர். ஜகார்த்தா ஆளுநர் பசுகி புர்னாமா பதவி விலகக் கோரி தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த வேளையில் அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டதாக ஜகார்த்தா போலிஸ் பேச்சாளர் ஆர்கோ யுவோனோ கூறினார். சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொள்ளும் ஜகார்த்தா ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி இந்தோனீசிய முஸ்லிம்கள் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகை வரை ஊர்வலமாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!