எகிப்து தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

கெய்ரோ: எகிப்தின் டன்டா நகரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டின் அதிகாரிகள் தெரிவித் தனர். இதில் 50 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்க வில்லை. குண்டுவெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. போப் பிரான்சிஸ் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில்தான் கெய்ரோவின் ஆகப்பெரிய தேவா லயத்தில் தற்கொலையாளி ஒருவன் தாக்கியதில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 49 பேர் காயம் அடைந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்கு தலில் பல பெண்களும் குழந்தை களும் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

குண்டுவெடிப்புக்குப் பிறகு தேவாலயத்தில் கூடிய மக்கள். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!