வடகொரியா மீதான மோதல் எப் போது வேண்டுமானாலும் வெடிக் கலாம் என்றும் எந்த ஒரு போரி லும் யாருக்கும் வெற்றி கிட்டப் போவதில்லை என்றும் சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்க=வடகொரிய பதற் றம் அதிகரித்து வரும் வேளையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (படம்) இவ்வாறு கூறியுள்ளார். வடகொரியா மேலும் ஒரு அணுவாயுத அல்லது ஏவுகணைச் சோதனையை மேற்கொள்ளக் கூடும் என்று கூறப்படும் நிலை யில் அப்பிரச்சினையை அமெரிக்கா கவனித்துக்கொள்ளும் என அதி பர் டோனல்ட் டிரம்ப் தெவித் திருந்தார். அதனைத் தொடர்ந்து சீனாவின் கருத்து வெளியாகி உள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி