இஸ்தான்புல்: துருக்கி வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. அதிபர் ரசிப் தயிப் எர்டோகனின் அதிகாரங்களை விரிவுபடுத்த அனு மதிக்கும் வகையிலான புதிய அர சியலமைப்புச் சட்டம் மீது துருக் கிய மக்கள் நேற்று வாக்களித்தனர். அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் போல ஆற்றல்மிக்க அரசாங்கத்தை உருவாக்க அதி பருக்குக் கூடுதல் அதிகாரங்கள் அவசியப்படுவதாக அரசாங்க ஆத ரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் நினைத்ததைச் சாதித் துக்கொள்ளும் வகையில் ஒரே மனிதனின் ஆட்சிக்கு வித்திடக் கூடும் இது என்று எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், எதிர்த்தரப்பின் இந்தப் பிரசாரம் சுத்தப் பொய் என்று அதிபர் எர்டோகன் குறிப்பிட்டுள் ளார். மேலும், நாடாளுமன்ற நடுநிலைமையும் நீதி நியாயமும் தமது அரசியல் அதிகாரத்தின்கீழ் வரும் என்று அவர் உறுதி அளித் துள்ளார்.
இஸ்தான்புல் நகரின் வாக்களிப்பு மையம் ஒன்றில் அதிபர் தயிப் எர்டோகன் தமது வாக்கைச் செலுத்தினார். படம்: ராய்ட்டர்ஸ்