வெலிங்டன்: ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசாவில் மாற்றங்களை அறிவித்த மறு நாளே நியூசிலாந்தும் திறன் பெற்ற ஊழியர்களுக்கான விசா விதிமுறைகளைக் கடுமையாக்கி யிருக்கிறது. நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் மைக்கல் உட்ஹவுஸ், ஆஸ்திரேலிய வேலைகள் ஆஸ் திரேலியர்களுக்கே என்று ஆஸ் திரேலிய பிரதமர் கூறியதையும் அமெரிக்க வேலைகள் அமெரிக் கர்களுக்கே என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறிய தையும் எதிரொலிக்கும் வகையில் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
இதையொட்டி இவ்வாண்டு இறுதியில் நியூசிலாந்து விசா விதிமுறைகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. குறைந்தபட்ச ஊதியம், வெளி நாட்டு ஊழியர்களைக் குறிப் பிட்ட காலத்திற்கு அனுமதிப்பது போன்றவை மாற்றங்களில் சில எனத் தெரிவிக்கப்பட்டது. "சம நிலையைக் கட்டிக் காக்கும் நோக்கோடு மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக நியூசிலாந்து நாட்டவர்களை வேலைக்கு அமர்த்த முதலாளி களை ஊக்கமூட்டும், நியூசி லாந்து நாட்டவர்களின் திறன் களை மேம்படுத்த பயிற்சி அளிக் கப்படும்," என்று திரு உட்ஹவுஸ் குறிப்பிட்டார்.