ஆப்கான் தாக்குதலில் 140 ராணுவ வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள மசார்- ஐ-சரீப் நகரத்தில் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 140 ராணுவ வீரர்கள் உயிரிழந்த தாக ஆப்கான் அதிகாரிகள் தெரி வித்தனர். அத்தாக்குதலில் இன்னும் பலர் காயம் அடைந்ததாகவும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக் கக்கூடும் என்று அஞ்சப்படுவ தாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ராணுவத் தளத்தைக் குறிவைத்து போராளி கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார். ராணுவ சீருடை அணிந்து வந்திருந்த தலிபான் போராளிகள் சுமார் 10 பேர் ராணுவத் தளத்திற் குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தாகவும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வீரர்கள் மற்றும் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலி லிருந்து வெளியில் வந்தவர்கள் ஆகியோர் மீது போராளிகள் சரமாரியாக சுட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆப்கானில் ராணுவத் தலைமையகத்தைக் குறிவைத்து தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆப்கான் ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தாக்குதலில் குறைந்தது 140 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!