பிரான்சில் வாக்களிப்பு

பாரிஸ்: பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில் நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் உடன டியாக வெளியேற்றப்பட்டனர். நியூயார்க்கில் உள்ள இந்த தூதர கத்தில்தான் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு நாட்டவர்கள் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்ட்ரல் பார்க் அருகில் ஃபிஃப்த் அவென்யூவில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட் டிருந்ததால் காவல்துறையினருக்கு சந் தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத் திலிருந்து அனைவரும் வெளியேற்றப் பட்டனர். மாலை 5.00 மணியளவில் அந்த வாகனம் சோதனையிடப்பட்ட பிறகு நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பியது. நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் வட்டாரங்களில் சுமார் 28,500 பிரென்சு நாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரான்சில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். ஆனால் நால்வருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் 2வது சுற்று வாக் களிப்பு நடைபெறும்.

புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இந்தி யர்கள் வாக்கு அளித்தனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!