விமான இருக்கையை விட்டுக் கொடுக்கும் பயணிகளுக்கு 10,000 டாலர்

நியூயார்க்: அளவுக்கு அதிகமான பயணிகள் விமான டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்துகொண்டிருக்கும்போது இருக்கையை விட்டுக்கொடுக்க முன்வரும் பயணிகளுக்கு 10,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் விமானச் சிப்பந்திகளுக்கு இருக்கை தேவைப்பட்டதால் விமானத்தில் சென்ற மருத்துவர் ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரை போக்கும் வகையில் இத்தகைய சலுகையை வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. முன்னதாக டெல்டா நிறுவனம், அதுபோன்ற சம்பவம் நடந்தால் இருக்கையை விட்டுக்கொடுக்கும் பயணிக்கு 9,950 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!