சோல்: வடகொரியா மற்றொரு ஏவுகணையை பாய்ச்சி சோதனை யிட்டுள்ளது என்று தென் கொரிய, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஏவுகணை பாய்ச்சிய சில நொடிகளில் வெடித்து விட் டது என்று அவர்கள் குறிப்பிட் டனர். இதோடு சேர்த்து இரண்டாவது முறையாக வடகொரியாவின் ஏவு கணை சோதனை தோல்வியடைந் துள்ளது. இதற்கிடையே வடகொரியா வின் செயல் சீனாவுக்கும் சீன அதிபருக்கும் மரியாதை அளிக்கும் வகையில் இல்லை என்பதையே காட்டுகிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறிப் பிட்டார். வடகொரியாவின் உள்ளூர் நேரப்படி விடியற்காலை பியோங் யாங்கின் தெற்கே உள்ள ஒரு இடத்திலிருந்து ஏவுகணை பாய்ச்சப்பட்டது என்று தென் கொரியா தெரிவித்தது.
வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஐநா பாதுகாப்பு மன்றம் கூடியது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சரும் மற்ற தலைவர்களைச் சந்தித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்