சான் டியேகோ: கையில் பீர் புட்டி யை வைத்துக்கொண்டு துப்பாக் கிச்சூடு நடத்திய ஆடவர் ஒருவரை அமெரிக்காவின் சான் டியேகோ மாநில போலிசார் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் சான் டியேகோவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சொந்தமான நீச்சல் குளம் அருகே சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 9 மணி அளவில் நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில் எட்டு பேர் காயமுற்றனர். தாக்குதல் குறித்து போலி சாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்தனர். தாக்குதல்காரன் போலிஸ் அதிகாரிகளைப் பார்த்து துப்பாக்கி யால் குறிவைத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சான் டியேகோ போலிஸ் பிரிவின் தலைவர் ஷெல்லி சிம்மர்மன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
துப்பாக்கிக்காரனின் அடை யாளமும் தாக்குதலுக்கான காரண மும் இன்னும் வெளியிடப்பட வில்லை. விசாரணை நடத்தப் படுகிறது. துப்பாக்கிக்காரன் பலரைக் குறிவைத்து சுட்டதை நேரில் பார்த்ததாக அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார். சுடப்பட்டவர்கள் தரையில் கிடந்ததாகவும் காயமுற்ற ஒருவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக வும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.