பெர்த்: குவாண்டாஸ் நிறுவன தலைமை நிர்வாகி ஆலன் ஜாய்ஸ் பெர்த் விமான நிலையத் தில் ஒரு கூட்டத்தில் உரை யாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒருவர் அவர் முகத்தில் கிரீமை பூசிவிட்டுச் சென்றார். கண்இமைக்கும் நேரத்தில் யாருமே எதிர்பாராத இந்தச் சம்பவம் நேற்று நடந்தது. குவாண்டாஸ் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற இந்த 9 ஆண்டு காலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது இல்லை என்று திரு ஆலன் ஜாய்ஸ் கூறினார். அவர் முகத்தில் கிரீமைப் பூசியவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்ற னர். அந்த நபர் எதற்காக திரு ஆலன் ஜாய்ஸ் முகத்தில் கிரீமைப் பூசினார் என்பது இன்னும் தெரியவில்லை. அது என்ன வகை கிரீம் என்பதை தன்னால் உணரமுடியவில்லை என்று கூறிய ஆலன் ஜாய்ஸ், "முதலில் என் முகத்தை சுத்தம் செய்ய பெர்த்தில் ஒருவர் தேவைப்படுகிறார்," என்று சொன்னார்.
குவாண்டாஸ் தலைமை நிர்வாகி ஆலன் ஜாய்ஸ் உரையாற்றியபோது அவர் முகத்தில் ஒருவர் 'கிரீமை' பூசினார். படம்: செவன் நியூஸ்